திரும்பிப்பார்க்கிறேன்!----ஓர் உரத்த சிந்தனை!
நடந்து வந்த ஓரடிப்பாதை
கிடந்துகொண்டு தான் உள்ளது இப்போதும்!
குத்திய முட்களை முறைக்கிறேன்......
இல்லை நண்பா!
உன்னை வருத்தும் எண்ணம்
எங்களுக்கில்லை எப்போதும்..........
உரசும்போதுதானே வைரமும்
புன்னகைக்கிறது?
உன்னை பதப்படுத்த நாங்கள்
எடுத்த எத்தனிப்பில்
சிறிது கடுமை கூடிப்போயிற்று அவ்வளவே!
எத்தனை எளிதாய் சமாதானம் ?
வலித்த என்னிதயம்
வடித்த குருதிக்கு இழப்பீடு என்னவாம்.....?
அட நீயும் சராசரி மனிதனா?
நாங்கள் பதமாய் பக்குவமாய்
உனக்களித்த அனுபவங்களுக்கு
எந்த மதிப்பாளர்
அறுதியிட்டு விலைகூற முடியும்?
முயற்சித்துப்பார்!
முடிவெடு நீ!
அட ஆமாம்!
இதை எப்படி மறந்தேன் நான்?
பலமுகஙகளையும்
சில பொய்முகங்களையும்
என் மூளைக்கு தெரிவித்த
ந்யூரான்கள் அல்லவா நீங்கள்!
நன்றி முட்களே.....!
இன்னும் பலமாய்
என்னை உரசுங்கள்!
வாழ்க்கை மகுடத்தின் மூலவைரமாய்
என்னை மாற்றுங்கள்.............!
Saturday, October 16, 2010
கொலையும் நன்றே...! கொலையும் நன்றே..!
கொலையும் நன்றே...! கொலையும் நன்றே..!
சிலந்திவலை கலைக்கையில்
கலங்கினேன்
ஓருயிரின் வயிற்றில் அடிப்பதாய்..
தப்பித்த பூச்சிகள் பறந்து கொண்டே
நன்றிகள் கூறியபோது -
நிம்மதியாய் உணர்ந்தேன்...
ஓர்விளக்கை அணைத்தேன்
காரிருள் கப்பியது...ஆனால்
விட்டில்கள் கூட்டமோ
விழாமல் தப்பியது...!
ஓருயிரை வதைப்பதால்
பல்லுயிர் ஓம்பப் படுமெனில்
கொலையும் நன்றே கொலையும் நன்றே..!
சிலந்திவலை கலைக்கையில்
கலங்கினேன்
ஓருயிரின் வயிற்றில் அடிப்பதாய்..
தப்பித்த பூச்சிகள் பறந்து கொண்டே
நன்றிகள் கூறியபோது -
நிம்மதியாய் உணர்ந்தேன்...
ஓர்விளக்கை அணைத்தேன்
காரிருள் கப்பியது...ஆனால்
விட்டில்கள் கூட்டமோ
விழாமல் தப்பியது...!
ஓருயிரை வதைப்பதால்
பல்லுயிர் ஓம்பப் படுமெனில்
கொலையும் நன்றே கொலையும் நன்றே..!
Monday, September 27, 2010
ஒரு கவிஞனின் கடைசி வரிகள் - அடுத்த பகுதி..
இன்றைய குழந்தைகள் ஜனிக்கும்போதே
இணையத்தில்
பிறக்கும் வித்தையறிந்து
உலகை எட்டிப்பார்க்கின்றன..
தாய்ப்பால் மகத்துவம் குறித்து
தாய்க்கே கூகிள் உதவியால்
தகவல்தரும் குழந்தைகள் இன்று...
அந்த கவிஞனின் இளமைப்பருவத்திலோ
மார்கோனியும் மர்ஃபியும்தான்
இறக்கையற்ற தேவதைகள்...
இரண்டே முக்கால் ரூபாய் லைசன்சை
மாதந்திரம் கட்ட வழியின்றி
குட்டி டிரான்சிஸ்டரை பதுக்கிவைத்தது
அந்தக்காலம்...
பதினொருவயதில்
அந்தக்கவிஞனுக்கு கல்வித்தாகம்
அவன் தந்தைக்கோ கலவித்தாகம்..
ஆனாலும் அவனை பாதிக்கவிலலை
தந்தையின் தாக்கம்...
ஏழாம்வகுப்பின் டி பிரிவு சாந்திக்கு
எழுதியது முதல் காதல் கடிதம்
அதில் கூட
இப்படிக்கு உண்மையுள்ள என்றே
முடித்தது அவன் நாகரிகம்...
சாந்திக்கோ அது தீயைத்தொட்ட
குழந்தையின் மனநிலை...
நான்கு கிலோமீட்டர் நிதமும்
நடந்து சென்றே
அவனது பள்ளிக்காலம்
கடந்து சென்றது...
எட்டாம் வகுப்பு சந்தானம்
எட்டாத சில காமச்செய்திகளைப்
பகிர்ந்து கொண்ட போது
உயிர் நண்பனாய் மாறினாலும்
அவனது
உயிர் பிரிந்தது நாய்கடியால்...
நட்புக்கு முதல் அடி கொடுத்த மரணம்..
நட்பிலிருந்தே அவனை
நாளும் பயமுறுத்தி விலக்கியது....
இவன் நட்பால் பிறர்உயிர்போகும் என்றே
எண்ணற்ற ஆண்டுகள் எண்ணி உளைந்தான்...
அண்ணனில்லை இவனை
அடித்து துன்புறுத்த
அறிவுரை சொல்லி வழி நடத்த...
எண்ணம் போல் வாழ்ந்தான்
கல்வியில் மிகச்சிறந்தான்...
கமலா டீச்சரின்
செல்லக்குழந்தையானான்...!
தொடர வாய்ப்புண்டு...
இணையத்தில்
பிறக்கும் வித்தையறிந்து
உலகை எட்டிப்பார்க்கின்றன..
தாய்ப்பால் மகத்துவம் குறித்து
தாய்க்கே கூகிள் உதவியால்
தகவல்தரும் குழந்தைகள் இன்று...
அந்த கவிஞனின் இளமைப்பருவத்திலோ
மார்கோனியும் மர்ஃபியும்தான்
இறக்கையற்ற தேவதைகள்...
இரண்டே முக்கால் ரூபாய் லைசன்சை
மாதந்திரம் கட்ட வழியின்றி
குட்டி டிரான்சிஸ்டரை பதுக்கிவைத்தது
அந்தக்காலம்...
பதினொருவயதில்
அந்தக்கவிஞனுக்கு கல்வித்தாகம்
அவன் தந்தைக்கோ கலவித்தாகம்..
ஆனாலும் அவனை பாதிக்கவிலலை
தந்தையின் தாக்கம்...
ஏழாம்வகுப்பின் டி பிரிவு சாந்திக்கு
எழுதியது முதல் காதல் கடிதம்
அதில் கூட
இப்படிக்கு உண்மையுள்ள என்றே
முடித்தது அவன் நாகரிகம்...
சாந்திக்கோ அது தீயைத்தொட்ட
குழந்தையின் மனநிலை...
நான்கு கிலோமீட்டர் நிதமும்
நடந்து சென்றே
அவனது பள்ளிக்காலம்
கடந்து சென்றது...
எட்டாம் வகுப்பு சந்தானம்
எட்டாத சில காமச்செய்திகளைப்
பகிர்ந்து கொண்ட போது
உயிர் நண்பனாய் மாறினாலும்
அவனது
உயிர் பிரிந்தது நாய்கடியால்...
நட்புக்கு முதல் அடி கொடுத்த மரணம்..
நட்பிலிருந்தே அவனை
நாளும் பயமுறுத்தி விலக்கியது....
இவன் நட்பால் பிறர்உயிர்போகும் என்றே
எண்ணற்ற ஆண்டுகள் எண்ணி உளைந்தான்...
அண்ணனில்லை இவனை
அடித்து துன்புறுத்த
அறிவுரை சொல்லி வழி நடத்த...
எண்ணம் போல் வாழ்ந்தான்
கல்வியில் மிகச்சிறந்தான்...
கமலா டீச்சரின்
செல்லக்குழந்தையானான்...!
தொடர வாய்ப்புண்டு...
ஒரு கவிஞனின் கடைசி வரிகள்...
ஒரு கவிஞனின் கடைசி வரிகள்...
அந்த கவிஞன் பிறந்த போது
அவன் தொப்புள் கொடியிலிருந்து
தாயைப்பிரித்து புதைக்க நேர்ந்தது...
முலைப்பால் இல்லாது பிழைப்பானா இவன்
மலைப்பால் வியர்த்தன உற்றவர் மனங்கள்...
தாயின் ஸ்தானத்தை கொடுத்துத் தாங்கின
பசுவின் ஸ்தனங்கள்...
ஒற்றைக்கொடியாய் உலாவந்தது
அந்த சிற்றுளி...
அது செதுக்கிய சோகச்சிற்பங்கள்
காட்சிக்கின்றியே கரைந்து போயின...
வந்த தாயின் முலைக்கரங்கள்
சொந்த குழவிக்கே அன்புக்கரங்களாயின...
சோர்ந்து போன இந்தக் குழந்தை
சோகவரிகளை சொந்தமாக்கியது...
ஓர்வயதில் மெல்ல நடந்து
தானே விழுந்து தானே எழுந்து
காயங்களைக் கணக்குப் பார்த்து
சாபங்களை லாபங்களாக்கின..
இரண்டாம் வயதில் ஈரடிவைத்து
முரண்டு பிடித்த விதியின்
முரட்டுக்கரங்களை
விரட்டி வளர்ந்தது அந்தக் குழந்தை...
சோற்றுப்பாலிலும் நீற்றுப்பாலிலும்
ஆற்றிக்கொண்டது தன் அரும்பசியை
வேற்றுமனிதர் தேற்றுவாரின்றி
வேதனை தீர்த்தது மூன்றாம் வயதில்...
நல்ல குழந்தைகள் நாலில் பேசுமாம்
தெய்வக்குழந்தையோ நாட்பட பேசுமாம்..
ஜுனைதாவின் ஃப்ராக்கைப் பிடித்து
சுற்றிக்களித்தது நான்காம்வயதில்...
ஆரம்பப் பள்ளியின் வாசலைமிதித்து
வாழ்க்கையின் புதுக்கணக்கு போடச்சென்றதும்
தமிழைக்கரைத்துக் குடிக்கப்போகுமுன்
அகரம் முதலாய் அளந்ததும் ஐந்தில்...!
குளத்தங்கரையின் குதூகலப்பள்ளியில்
நிலத்தடி நீரும் அமெரிக்க கோதுமையும்
வளர்த்து வந்தது வாடிய பயிரை
வயிற்றுக்காகவே விடுமுறைஇல்லை...
பட்டு நூலும் சொட்டுத் தேனீரும்
விட்டுவிடாமல் உயிரைக்காத்ததாம்..
வரிக்கு வரிதமிழைக் குடித்தவன்
வரிக்கியுடன் வாழ்க்கை கழித்தான்..
பத்மினி அக்காவும் பானுமதி அக்காவும்
தனலட்சுமி தோழியும் விஜயாவும் வாசுகியும்
துரைப்பயலும் சேகரும் சேர்ந்து
பத்து வயதுவரை இவனுடன்
பாங்காய் களித்தனர் பால்யவயதில்...
தொடர வாய்ப்புண்டு...!..
அந்த கவிஞன் பிறந்த போது
அவன் தொப்புள் கொடியிலிருந்து
தாயைப்பிரித்து புதைக்க நேர்ந்தது...
முலைப்பால் இல்லாது பிழைப்பானா இவன்
மலைப்பால் வியர்த்தன உற்றவர் மனங்கள்...
தாயின் ஸ்தானத்தை கொடுத்துத் தாங்கின
பசுவின் ஸ்தனங்கள்...
ஒற்றைக்கொடியாய் உலாவந்தது
அந்த சிற்றுளி...
அது செதுக்கிய சோகச்சிற்பங்கள்
காட்சிக்கின்றியே கரைந்து போயின...
வந்த தாயின் முலைக்கரங்கள்
சொந்த குழவிக்கே அன்புக்கரங்களாயின...
சோர்ந்து போன இந்தக் குழந்தை
சோகவரிகளை சொந்தமாக்கியது...
ஓர்வயதில் மெல்ல நடந்து
தானே விழுந்து தானே எழுந்து
காயங்களைக் கணக்குப் பார்த்து
சாபங்களை லாபங்களாக்கின..
இரண்டாம் வயதில் ஈரடிவைத்து
முரண்டு பிடித்த விதியின்
முரட்டுக்கரங்களை
விரட்டி வளர்ந்தது அந்தக் குழந்தை...
சோற்றுப்பாலிலும் நீற்றுப்பாலிலும்
ஆற்றிக்கொண்டது தன் அரும்பசியை
வேற்றுமனிதர் தேற்றுவாரின்றி
வேதனை தீர்த்தது மூன்றாம் வயதில்...
நல்ல குழந்தைகள் நாலில் பேசுமாம்
தெய்வக்குழந்தையோ நாட்பட பேசுமாம்..
ஜுனைதாவின் ஃப்ராக்கைப் பிடித்து
சுற்றிக்களித்தது நான்காம்வயதில்...
ஆரம்பப் பள்ளியின் வாசலைமிதித்து
வாழ்க்கையின் புதுக்கணக்கு போடச்சென்றதும்
தமிழைக்கரைத்துக் குடிக்கப்போகுமுன்
அகரம் முதலாய் அளந்ததும் ஐந்தில்...!
குளத்தங்கரையின் குதூகலப்பள்ளியில்
நிலத்தடி நீரும் அமெரிக்க கோதுமையும்
வளர்த்து வந்தது வாடிய பயிரை
வயிற்றுக்காகவே விடுமுறைஇல்லை...
பட்டு நூலும் சொட்டுத் தேனீரும்
விட்டுவிடாமல் உயிரைக்காத்ததாம்..
வரிக்கு வரிதமிழைக் குடித்தவன்
வரிக்கியுடன் வாழ்க்கை கழித்தான்..
பத்மினி அக்காவும் பானுமதி அக்காவும்
தனலட்சுமி தோழியும் விஜயாவும் வாசுகியும்
துரைப்பயலும் சேகரும் சேர்ந்து
பத்து வயதுவரை இவனுடன்
பாங்காய் களித்தனர் பால்யவயதில்...
தொடர வாய்ப்புண்டு...!..
Thursday, September 9, 2010
எங்கிருந்து வந்தாய்...?
எங்கிருந்து வந்தாய்...?
எல்லையற்ற துன்பங்களுடன்
நான்ஏங்கி நின்றபோது
தொல்லைகளைப் போக்கி
நீ தாங்கி நின்றாய்....
வறண்ட என் கண்களை
வருத்தமுடன் துடைத்தாய்
சூழ்ந்து நின்ற துன்பங்களை
கருத்துடன் உடைத்தாய்....
நல்லவைகள் மட்டுமுனைச் சேருமென்றும்
சில்லறைக் கவலைகளை சிதறவிடுஎன்றும்
சொல்லிச் சொல்லியே சொர்க்கம் காட்டி நின்றாய்....
வைகறை மேகங்கள் பொய்த்தாலும் பொய்க்கா
வைகை நதியாய் மனமாட்சி செய்தாய்.....
கைகளால் துவட்டியே என்
கவலைநீரை உலர்த்தினாய்..
என் செய்தேன் நானுனக்கு
என்றே நான் கணக்கிட்டேன்...
தாயே... நீ என்னை
புன்செய்நிலமாக்கி
புழுதி நீக்கி நின்றாய்...
நன்செய் மண்ணைப்போல்
அமைதியுடன் ஏற்றேன்..
உழைத்திட்ட விவசாயி
வருமானம் பார்த்ததில்லை...
பிழைத்து நிற்கும் உயிர்களுக்கு
உணவாக்கி மகிழ்வான்..
என்னை உழுதிட்ட
விவசாயி நீ எனக்கு....
என்ன தருவேன் எனைத்தவிர
ஏதுமில்லை என்னிடத்து....!
Tuesday, August 24, 2010
முத்தத்தின் சந்தங்கள்......
பட்டுத்துகிலொன்றை படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத்தடுமாறிய முல்லை கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டுஇடம் மாறியது நம்இதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள் ஒவ்வொன்றாய்த்தேடின...
தவித்த என்இதழ்கள் ஏங்கின உனது
குவித்த இதழ்களில் தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும் கண்டுளரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு நீர் வார்த்தாய் இதழ்களால்...
காமனின் கண்பட்ட இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால் மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமபானத்தில் மயங்கிய தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம் நலமதனைச் சுகித்து நின்றோம்...
Friday, April 9, 2010
கண்ணே கண்மணியே!

கண்ணே கண்மணியே!
என் தாலாட்டுக்கு
கருப்பொருளாய் வாய்த்தவளே!
கண்ணே கருமணியே!
நீ கருவாய் இருக்கையில்
ஒரு வாய் உண்ணமுடியா
மசக்கை தந்தவளே!
உன்னைச் சுமந்ததால்
என் வயிறு
உன்னதம் பெற்றது...
நீ உண்ணும் போது
என் வயிறு குளிரும்
ரசாயனம் நிகழந்தது..
நாளை உலகுக்கு
அறிவுப்பசி தீர்ப்பவளே!
உன்பசி தீரட்டும் இன்று!
நிலாவைக் காட்டுகிறேன்
நீ அதில கால் வை நாளை!
கள்ளிப்பால் தரச்சொன்ன
கொள்ளிவாய்கள் அழுகட்டும்...
நீ அழப்பிறந்தவளல்ல!
ஆளப்பிறந்தவள் நீ!
Saturday, April 3, 2010
மலரும் வண்டும்...

மலரும் வண்டும்...
மலருக்கு மலர் தாவும்
வண்டினைக் கண்டதுண்டு...
வண்டுக்கு வண்டு தாவும்
மலரினைக் கண்டதுண்டா...?
எம்மலர் சிறந்ததெனத் தேர்ந்தெடுத்து
தேன்குடிக்கும் வண்டுக்கோ
மலரின் வலிகள் புரிவதில்லை...
வண்டுதாவும் மலர்களுக்கும்
வண்டின் ரணம் புரிவதில்லை...
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
ஒற்றை மலருக்கு
வண்டின் எத்தனம் புரிவதில்லை...
மகரந்தப் போதையில் மூழ்கி
மலருக்காய் உயிர்கொடுத்த வண்டுக்கோ
மலரின் மெத்தனம் தெரிவதில்லை..
வண்டுகளின் போதையில்
வாட்டமாய் மயங்கி விட்ட
மலருக்காய் ஏங்கி விட்ட
வண்டுக்கோர் அஞ்சலி...!
Sunday, March 21, 2010
அன்னையென்றே நானும்...

அன்னையென்றே நானும்....
மழலையீன்ற மணிவயிறென
மற்றோரைச் சொல்வீர்கள்...
விழலில்லா நிலத்தையும்
பூமாதேவி என்பீர்கள்...
குழவியொன் றீந்திடாமல்
குறைபட்ட பாவியாய்
அழக்கூட வலுவில்லாது
அவச்சொல் சுமக்கிறேன்...
நிலம்பழுதென்றே
நிதம் கூவிநிற்பீர்
விதைபழுதா என்றே
விசாரித்திருப்பீரா..?
மாவடு கடித்திட
மனசெல்லாம் உண்டெனக்கு...
ஆவது வழியறியாது
நோன்புகள் நேர்கிறேன்....
போவதுவும் வருவதுவும்
பொல்லாங்கு சொல்லுவதை
வாயது அடைத்தே
வாடிப்போய் நிற்கிறேன்...
நோயல்ல இதுவென்றே
நோகித்தான் பறைகிறேன்..
சேயறியா நாய்களும்
இத்தனை இழிபடுமோ..?
மகவில்லா மாதர்கள்
மாந்தரில் கணக்கில்லையா?
முகவரி இல்லாத
மடல்போல்தான் அலைகிறேன்...
இகமே சரியில்லை
பரலோகம் எனக்கெதற்கு....?
அகம்குளிர அன்னையாய்
அழைக்கப்பட மாட்டேனா..?
Sunday, February 14, 2010
வலி...!
உற்றவரென்று எண்ணியிருந்த சிலர்
எட்டி உதைக்கும் போது...
அடுத்திருந்து அழுதுதேற்றி
எட்டிப்போய் பரிகசிக்கும் போது...
நட்பென்று பேர் சொல்லி
நகம் நான் சதை நீ என்றே தினம்கூறி
நடுக்காட்டில் விட்டோடிய போது...
எதிரிக்காய் தீட்டுவதாய் கத்தியைக் காட்டி
எதிர்பாராமல் கழுத்தை நெருங்கும் போது ...
நீ இந்நாட்டின் பெர்ட்னாட்ஷா
உன் மூளை அருங்காட்சிக்கு அருகதை
என்றெல்லாம் கூறி
பின்னால் வாய் மூடி அழுத்தமாய்ச் சிரித்தபோது...
உன்னைப்போல் ஒருவன் இனி பிறக்க வேண்டும்
என்ன தேடினாலும் கிடைக்காத வைரம் நீ
என்றெல்லாம் உயர்த்திவிட்டு
நல்ல தொரு நகைச்சுவை இல்லையா எனும் போது...
இதயத்தில் நீ தான் இனி யாருமில்லை
உதயத்தில் வேறொருவன் என்று கூறும்போது...
பன்னீரால் உனக்கு முழுக்காட்டு எனச்சொல்லி
வென்னீரைத்தலையில் வாரிக்கொட்டும் போது...
அழகியென்றால் அது நீமட்டும் தான்
என நிதமும் ஏற்றிவைத்துப் பின்
பழகியபின் பார்க்கலாம் வருகிறேன் எனும் போது...
தாயெனத்தாங்குவேன் ஒருபோதும் கைவிடேன்
போயெனக்கு உன்னிதயம் அறுத்துவா எனும்போது...
ஊரே கைகொட்டிப் பாராட்டி பரிசளித்து
யாரே நீ என்று எக்காளமாய்ச் சிரிக்கும் போது...
பெருங்கவிஞன் நீதான் மற்றெல்லாம் வெறுங்கவிஞர்
அருமையான வித்தகன் உனைப்போலில்லை எனக்கூறி
உருப்படாத உனக்கு பெருமை ஒருகேடா
உன்னைவிட நல்லோர் இதோபார் போடா
என்றென்னை எல்லாரும் புறக்கணிக்கும் போது...
வலி...!
Subscribe to:
Posts (Atom)