Thursday, November 1, 2012

மோன வெளிகள்...

மோனவெளிகள்..

ஒரு பொட்டல் வெளியில் 
யாருமில்லா மோனத்தில் 
ஓர் அமைதி 
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர் 
ஆசையில்லை.. 
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில் 
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே 
வாட்டிவதைக்கும் 
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும் 
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல் 
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய் 
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான 
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி 
எங்கோ பறக்க வைக்கும்..!!


கீழ்க்கண்ட ஆங்கிலக்கவிதையின் மொழிபெயர்ப்பு இது..!


Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness 
Of the firmament
And the stretch of the land 
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers 
Soothing and leading it 
On and on to a 
devouring sleep...