Thursday, January 26, 2012

குடியரசு தின வாழ்த்து..


குடியரசுதின வாழ்த்து..

எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌
அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌
பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எங்க‌
வத்தின இடுப்புக்கு ஓர்வழியும் இல்லையே..

ஆண்டுக்கு ரெண்டுதரம் கொடியேத்திட்டு 
வாண்டுகளுக் கெல்லாம் முட்டாய் தந்தாங்க‌
மாண்டு போன தமிழங்களை மறந்து போனாங்க‌
ஏண்டு கேக்க ஆளில்ல‌ன்னு பறந்து போனாங்க..

தேர்தலுன்னு ஒருவிழா எப்பவும் உண்டு அப்ப‌
போர்முனைக்கு போவதுபோல் பொங்கி நிப்பாங்க‌
ஏர்முனையில் வதங்கினவங்க ஏங்கி நின்னாங்க‌
சீர்திருத்த வந்தவங்க சிரிக்கவைச்சாங்க..

எல்லாரும் பாடுபட்டு எங்களுக்காக 
நல்ல நல்ல திட்டமெல்லாம் தீட்டிப்புட்டாங்க‌
சல்லாடை கண்ணு போல கிழிந்ததுணிதான்
சாசுவதம் எங்களுக்கு கண்டுபுட்டோங்க..

1 comment:

  1. கண்ணீர் வார்த்தையில
    நம்ம நாட்டு நடப்பை இம்புட்டு அழகா
    நற்க்குன்னு உறைக்கிறமாதிரி சொல்லீட்டேங்க

    ReplyDelete