
தேமாங்காய்.. புளிமாங்காய்..
தேமாங்காய்.. புளிமாங்காய் ..
பாங்காய்த்தான் வாசித்தாள்..
பூசனிக்காய் .. முருங்கைக்காய்
இடையிடையே யோசித்தாள்..
வடுமாங்காய் போலிவளோ
நெடுங்கனவு கண்டிருந்தாள்..
சிடுமூஞ்சித் தகப்பனையும்
கடுந்தாங்கி வளர்ந்திடுவாள்..
தெம்மாங்காய் பாட்டுபாடி
கம்மாயில் ஓடியவள்..
அம்மா’ங்காய் இறந்தவுடன்
சும்மாடில் காய் சுமந்தாள்..
தீம்போக்காய் மேல்நின்று
மேம்போக்காய் மேய்வோரின்
பார்வைக்காய் துடித்திடுவாள்
தீமைக்காய் அழுதிடுவாள்..
ஏழைக்காய் வாய்த்திட்ட
விதிக்காய் நினைப்பாளோ..?
கோழையாய் மடிந்திடாமல்
வாழத்தான் நினைப்பாளோ..?
காய்விற்றுப் பிழைத்தாலும்
காயம் விற்றுப் பிழைக்காமல்
செல்வாக்காய் வாழ்வாளோ..?
சொல்வாக்காய்க் கூறுங்களேன்..!!
ஏழ்மையின் வலியும் சூழலும் சொற்களாய் வடிந்திருக்கிறது
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நேர்மையான உழைப்பு ,நேரத்தோடு படிப்பு வாழ்த்துக்கள்
ReplyDelete