Sunday, July 8, 2007

பாரதி


அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!

தமிழ்ப் புலவர்க்ள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!

புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப்புலவர்களுகு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!

வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!

அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!

மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக்களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!

உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!

முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!