Tuesday, February 7, 2012

சறுக்கல்..


ஒற்றைக் காம்பில் உதித்த மலர்..
தன்னை உணர்ந்த போதிமரம்..

ஒருகாலை பூமியில் ஊன்றி 
மறுகாலுக்காய் மனதை ஊன்றிய
ஊன்றுகோல் ஒட்டவைத்த சான்றுகோல்..

வானுயர்ந்த எண்ணக்கோபுரங்களுடன் 
ஓர் ஒற்றைத்தூண்..

அடிமரம் பழுதானாலும் அங்கங்க‌ள் விழுதாகும்
ஆலமரம்..

ஒருக்கால் சறுக்கியதால்
மறுகால் படைக்க மறந்த 
இறைவனுக்கும் ஊனமோ..?

No comments:

Post a Comment