Friday, September 28, 2012

கலையாமல் கலைக்கும் கலை..


கலையாமல்கலைக்கும்கலை. 



ஆயிரம் பேருக்கு பிரியாணிப்பொட்டலமும்

ஆளுக்கு முன்னூறு ரூபாயும்..

ஐநூறு அடியாட்களும் 

கொண்ட மாநாடுகள்..

மேடைகளில் வீர வசனங்கள்.

கோஷமிட சிறப்பான முன்னூறுபேர்

கூட்டம் சேர்க்க முன்னாள் நடிகைகள்

தலைமட்டும் பெரிதாக வால் போஸ்டர்கள்

கடை வசூல் செய்ய அடியாட்கள்

பதினெட்டு அடி உயர கட் அவுட்டுகள்

வழியெங்கும் கொடிக்கம்பங்கள்

வாழ்க ஒழிக ( தான் வாழ்க எதிரி ஒழிக) கோஷங்கள்

வழியெங்கும் தண்ணீர்ப்பந்தல் 

அடிக்கடி தீக்குளிப்பு அறிவிப்புகள்

தேர்தல் நேரத்தில் தாராளமாய்த்’தண்ணீர்’..

முந்தின இரவு வெற்றிலை பாக்குடன் 

ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்

கள்ள ஓட்டு போட கையாட்கள்

ஓட்டுப்பெட்டிகளைக் கைப்பற்றும் கிண்ணரர்கள்

இவை எதுவும் இல்லாததால்

மீண்டும் பிறந்துவந்த 

மஹாத்மா காந்தி

தேர்தலில் தோற்றுப்போனார்..!

தமிழ்மன்றத்தின் 10 வதுஆண்டுவிழாவில் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்ற எனது கவிதை.

No comments:

Post a Comment