தொலைந்து விட்ட நாம்..
_________________________
ஒற்றை நொடிக்குள் நாம்
ஒன்றிக் கிடந்தோம்
ஓர் ஒளியாண்டுத் தொலைவுக்குள்
தொலைந்து போனது எப்போது..?
காலனும் பிரிக்காத காதலென்றாய் நீ
காலமும் பிரிக்காத காதலென்றேன் நான்
ஒரு மூன்றாம் மனிதனின் சூதுக்குள்
கவ்வப்பட்டோம் நாம்..!
கோர்த்திருந்த நம்மனத்தினுள்
நீர்த்துப் போன நினைவலைகளுக்குள்
நீங்கிவிட்ட நமது கனவுகளை
மீட்டுக்கொள்வது இனி எங்ஙனம்..?
முதற்காதல் மட்டுமல்ல..
முறிந்த காதலும்
மறக்க இயலாதது தான்..!
_________________________
ஒற்றை நொடிக்குள் நாம்
ஒன்றிக் கிடந்தோம்
ஓர் ஒளியாண்டுத் தொலைவுக்குள்
தொலைந்து போனது எப்போது..?
காலனும் பிரிக்காத காதலென்றாய் நீ
காலமும் பிரிக்காத காதலென்றேன் நான்
ஒரு மூன்றாம் மனிதனின் சூதுக்குள்
கவ்வப்பட்டோம் நாம்..!
கோர்த்திருந்த நம்மனத்தினுள்
நீர்த்துப் போன நினைவலைகளுக்குள்
நீங்கிவிட்ட நமது கனவுகளை
மீட்டுக்கொள்வது இனி எங்ஙனம்..?
முதற்காதல் மட்டுமல்ல..
முறிந்த காதலும்
மறக்க இயலாதது தான்..!
No comments:
Post a Comment