Sunday, September 9, 2007

தோளாட்டுப்பாடல்



தோளாட்டுப்பாடல்

தாயின் தாலாட்டும்
தாய்மாமனின் தோளாட்டும்
எல்லா மகவுக்கும் கொடுப்பினை இல்லை...
எனக்களித்த் இறைவனுக்கு நன்றி...
அன்று கருடன் தாங்கிய விஷ்ணு
அகில உலகம் அள்ந்தான்...
மாமன் தாங்கிய நான்
அன்பு உலகம் அளப்பேன்...
கண்ணனின் தாய் மாமன் அல்ல நீ!
தன்னுயிர் கருதா தாயின்
மறு உருவம் நீ!
என் தாயிட்ட பிச்சையாகிய
என்னுயிருக்கு காவலனாய்
என் தாய் மாமனே நீ!
என் கைகளுக்கும் வலு வரட்டும்..
தோள் தாங்கிய உன்
தாள் தாங்குவேன்!
அது வரை
நன்றியெனும் சிறு பொரியை
நானளிப்பேன் சுவைத்துக்கொள்!
சிறிய பூவுலகம் எனைத் தாங்கும்
ஹெர்குலிஸே நன்றி நன்றி!

No comments:

Post a Comment