Sunday, September 9, 2007

பதில் சொல் என்னுயிரே.....



பதில் சொல் என்னுயிரே.....

மாரியம்மாவும்
மேரியம்மாவும்
கருணைக் குன்றுகள் தாம்.....

மாரியப்பனும்
மேரி சூசையும்
மணந்தது இங்கே தான்....

கிருஷ்ணனும்
கிறிஸ்டோபரும்
காதலித்தது இங்கே தான்....

மீனாட்சியின் உள்மூச்சும்
கருணை மேரியின் வெளிமூச்சும்
ஸ்பரிசிப்பது இங்கே தான்....

கற்பூர வெளிச்சமும்
மெழுகுவத்தி வெளிச்சமும்
சங்கமிப்பது இங்கே தான்.....

இருகோயில்களுக்கும்
வந்திறங்கிய செங்கற்களும்
ஒரே சூளையிலிருந்து தான்...

ஆண்புறா கோயிலிலும்
பெண்புறா சர்ச்சிலும் தானே
உறங்குகின்றனவாம்....

இத்தனை ஒற்றுமைகளும்
இங்கே அமைந்திருக்க
உன் தந்தை பூசாரியும்
என் பங்குத்தந்தையும்
சம்பந்திகளாய் மாறுவரோ?

No comments:

Post a Comment