Tuesday, December 25, 2007

வாழ்க்கையை வாழ்ந்து பார்.......!

எல்லா இறகுகளையும்

இழந்துவிட்ட பறவை கூட

இறகுகளின் எச்சங்களால்

எத்தனிக்கும் மீண்டும் வான் அளக்க....!

ஒற்றைக்கம்பத்தின்

உச்சிமீது நிற்கும்போது கூட

கழைக்கூத்தாடியின் இதயம்

தன் அன்புக்குரியவளின்

தனிமையை நினைத்துருகும்...!

சில போழ்து நாமும்

செக்குமரம் சுற்றிவரும்

சுயசிந்தனை மறந்த மாடுகள்

போலதான் சிந்திக்கிறோம்!

பலமுறைவீழ்ந்த சிலந்தியும்

கடைசியில் வெற்றிபெறும்!

படித்த நாமேன் இப்படிப்

பதட்டத்தைப் போர்த்தி அலைகிறோம்...?

No comments:

Post a Comment