Tuesday, December 25, 2007

எது தான் வாழ்க்கை...?

வாழ்க்கையின் ஒவ்வொரு அடிக்கும்
வாதங்கள் பிரதிவாதங்கள் உண்டு...
அடிகளே வாழ்க்கையாகும்போது
அடித்தளம் அசையும் கூடாரம் -வாழ்க்கை!

நேர்மைக்கு என்றும் சோதனைகள் உண்டாமே..?
நேசத்துக்கும் அது சொந்தம் தானாமே...?
நிறைய பொய்சொல்லி நேசம்வளர்ப்பதை விட
நெஞ்சு நிறைய வாழ்த்துச் சொல்லி பிரிவதே - வாழ்க்கை!

அன்புற்றோர் கலங்குதல் கண்டும் அசைவிலா மனிதம் உண்டா?
ஆடையது நெகிழ்தல் கண்டும் அசைவிலா கைகள் உண்டா?
என்பும் தருமாமே நட்பு எங்கிருக்கிறது அதுபோல் இன்று..?
தன் சுகம் தன் பணி இதுதான் இன்றைய நிதர்சன வாழ்க்கை!

No comments:

Post a Comment