Thursday, September 9, 2010

எங்கிருந்து வந்தாய்...?




எங்கிருந்து வந்தாய்...?


எல்லையற்ற துன்பங்களுடன்
நான்ஏங்கி நின்றபோது
தொல்லைகளைப் போக்கி
நீ தாங்கி நின்றாய்....
வறண்ட என் கண்களை
வருத்தமுடன் துடைத்தாய்
சூழ்ந்து நின்ற துன்பங்களை
கருத்துடன் உடைத்தாய்....

நல்லவைகள் மட்டுமுனைச் சேருமென்றும்
சில்லறைக் கவலைகளை சிதறவிடுஎன்றும்
சொல்லிச் சொல்லியே சொர்க்கம் காட்டி நின்றாய்....

வைகறை மேகங்கள் பொய்த்தாலும் பொய்க்கா
வைகை நதியாய் மனமாட்சி செய்தாய்.....
கைகளால் துவட்டியே என்
கவலைநீரை உலர்த்தினாய்..

என் செய்தேன் நானுனக்கு
என்றே நான் கணக்கிட்டேன்...

தாயே... நீ என்னை
புன்செய்நிலமாக்கி
புழுதி நீக்கி நின்றாய்...
நன்செய் மண்ணைப்போல்
அமைதியுடன் ஏற்றேன்..
உழைத்திட்ட விவசாயி
வருமானம் பார்த்ததில்லை...
பிழைத்து நிற்கும் உயிர்களுக்கு
உணவாக்கி மகிழ்வான்..

என்னை உழுதிட்ட
விவசாயி நீ எனக்கு....
என்ன தருவேன் எனைத்தவிர
ஏதுமில்லை என்னிடத்து....!

No comments:

Post a Comment