Monday, September 27, 2010

ஒரு கவிஞனின் கடைசி வரிகள் - அடுத்த பகுதி..

இன்றைய குழந்தைகள் ஜனிக்கும்போதே
இணையத்தில்
பிறக்கும் வித்தையறிந்து
உலகை எட்டிப்பார்க்கின்றன..

தாய்ப்பால் மகத்துவம் குறித்து
தாய்க்கே கூகிள் உதவியால்
தகவல்தரும் குழந்தைகள் இன்று...

அந்த கவிஞனின் இளமைப்பருவத்திலோ
மார்கோனியும் மர்ஃபியும்தான்
இறக்கையற்ற தேவதைகள்...

இரண்டே முக்கால் ரூபாய் லைசன்சை
மாதந்திரம் கட்ட வழியின்றி
குட்டி டிரான்சிஸ்டரை பதுக்கிவைத்தது
அந்தக்காலம்...

பதினொருவயதில்
அந்தக்கவிஞனுக்கு கல்வித்தாகம்
அவன் தந்தைக்கோ கலவித்தாகம்..
ஆனாலும் அவனை பாதிக்கவிலலை
தந்தையின் தாக்கம்...

ஏழாம்வகுப்பின் டி பிரிவு சாந்திக்கு
எழுதியது முதல் காதல் கடிதம்
அதில் கூட
இப்படிக்கு உண்மையுள்ள என்றே
முடித்தது அவன் நாகரிகம்...
சாந்திக்கோ அது தீயைத்தொட்ட
குழந்தையின் மனநிலை...

நான்கு கிலோமீட்டர் நிதமும்
நடந்து சென்றே
அவனது பள்ளிக்காலம்
கடந்து சென்றது...

எட்டாம் வகுப்பு சந்தானம்
எட்டாத சில காமச்செய்திகளைப்
பகிர்ந்து கொண்ட போது
உயிர் நண்பனாய் மாறினாலும்
அவனது
உயிர் பிரிந்தது நாய்கடியால்...

நட்புக்கு முதல் அடி கொடுத்த மரணம்..
நட்பிலிருந்தே அவனை
நாளும் பயமுறுத்தி விலக்கியது....
இவன் நட்பால் பிறர்உயிர்போகும் என்றே
எண்ணற்ற ஆண்டுகள் எண்ணி உளைந்தான்...

அண்ணனில்லை இவனை
அடித்து துன்புறுத்த
அறிவுரை சொல்லி வழி நடத்த...
எண்ணம் போல் வாழ்ந்தான்
கல்வியில் மிகச்சிறந்தான்...
கமலா டீச்சரின்
செல்லக்குழந்தையானான்...!

தொடர வாய்ப்புண்டு...

1 comment: