Saturday, October 16, 2010

கொலையும் நன்றே...! கொலையும் நன்றே..!

கொலையும் நன்றே...! கொலையும் நன்றே..!

சிலந்திவலை கலைக்கையில்
கலங்கினேன்
ஓருயிரின் வயிற்றில் அடிப்பதாய்..

தப்பித்த பூச்சிகள் பறந்து கொண்டே
நன்றிகள் கூறியபோது -
நிம்மதியாய் உணர்ந்தேன்...

ஓர்விளக்கை அணைத்தேன்
காரிருள் கப்பியது...ஆனால்
விட்டில்கள் கூட்டமோ
விழாமல் தப்பியது...!

ஓருயிரை வதைப்பதால்
பல்லுயிர் ஓம்பப் படுமெனில்
கொலையும் நன்றே கொலையும் நன்றே..!

No comments:

Post a Comment