Thursday, October 28, 2010

எனைமறந்து போனதுமேன்...





எனைமறந்து போனதுமேன்...?

கட்டித் தழுவி கணக்கிலா சுகம் கண்டோம்
எட்டிச் சென்றதும் எனைமறந்து போனதுமேன்..?

இதழமுதம் இவ்வுலகில் இனிதான சுகமென்றாய்
முதல் முத்தம் முதுமைவரை மறந்திடாதென்றாயே..

உன்னுடலில் என்மேனி ஒருகவசம் என்றாயே
மென்னுடல் கசந்ததென்ன உன்னிதயம் கனத்ததென்ன..?

தங்கமே என் இதயம் தங்கிடும் உன்னிடமே
அங்கம் தான் பிரிகிறது அதுகூட தற்சமயம்...

எங்கு நான் சென்றாலும் உன்நினைவு என்னுடனே
ஏழையும் பசியும்போல் இணைந்திருக்கும் என்றாயே...

சென்ற இடத்தினில் செலவிட்ட நேரமதில்
என்றேனும் எனைநினைத்து உருகினையோ நாயகனே..

நளன்என்றும் நலன்என்றும் எனைமறவா மனத்துடனே
உளனென்றும் எண்ணிநின்றேன் நலமில்லா ஏழை நான்...

விலையில்லா காதலதன் வினையறியா பேதையான்
சிலைபோல நின்றேனே நிலைமறந்து இல்லமதில்...

என் தேவன்வாரானோ எனையள்ளிப் போவானோ
உன்மேனி வெண்மையனாய் எனைச்சேரமாட்டானோ

பாசமுடன் உனையணைத்து நெல்லுணவு நான் தருவேன்
நேசமிகு நல்வாக்கு அன்னமேநீ பகர்வாயோ...

No comments:

Post a Comment