Thursday, October 28, 2010

மலரவிடுங்கள்... மழலையிவள்...!



































மலரவிடுஙக்ள் மழலையிவள்...


கட்டழகுக் கன்னிஎனக்
கடுங்கணக்குப் போடாதீர்

மொட்டவிழாக் கூம்பும்
மலரென்றே எண்ணிடுவீர்

வெட்டவெளிப் பொட்டலில்
வெந்திடலும் வேண்டுமோ..?

கட்டமேதும் உணராத
கருத்தறியாப் பேதையிவள்

முகிழ்த்துக் குலைகாண
முற்றிடா வாழையிவள்

கருத்தரிக்கும் கருத்தறியும்
காலம் கனியவில்லை..

மழலையிவள் மணிவயிறு
மழலைக்காய் முதிரவில்லை..

கட்ட ஒரு ஆண்மகனைக்
கருத்துட்ன் காண்போரே...

நெட்ட நெடுவாழ்க்கை
குழவியிவள் கண்டிடவே

வெட்டவேண்டாம் குருத்திவளை
குழந்தை மணம் எனும் பேரால்...!

No comments:

Post a Comment