Friday, March 4, 2011

ஒரு சந்தேகம்...
















விரலில் தீப்பற்றினால்
வெடுக்கென்று
உதறுவாய் நீ...!

பலகாரம் சுடும் மனைவிமீது
கொதிக்கும் எண்ணை பட்டுவிட்டால்
சட்டியை உடைத்தெறிவாய் நீ..!

தீக்குள் விரலை வைக்கும்
அறியாத தன்மகனை
தாவி அணைத்தே
ஆறுதல் தருவாய் நீ..!

அடுத்த வீட்டில் பற்றிய தீயை
பரிதாபம் என்றில்லாவிட்டாலும்
பாதுகாப்புணர்வு கொண்டேனும்
பறந்தோடி அணைப்பாய் நீ..!

எங்கோ நடந்த
எதிர்பாரா விளைவுகளுக்காய்
மதம் பிடித்துப்போய்
தீக்கொள்ளி கையிலேந்த
மனம் வந்ததெப்படி நண்பா..?

No comments:

Post a Comment