Sunday, March 20, 2011

அவனும் அவளும்..

அவன்..
அவள் ஒருத்திக்காக
உலகையே ஒதுக்கினான்..

அவளோ
உறவுகளுக்காக
அவனையே ஒதுக்கினாள்...

அவன்
புற்றுநோயால்
புலம்பிக்கொண்டு இருந்த வேளையில்
அவள்
புத்தாண்டைக் கொண்டாடினாள்..

அவனது
கனவுக்கோட்டை
செங்கல் செங்கலாய்
உதிர்கின்ற வேளையில்
அவள்
பொங்கலோ பொங்கல் என்று
உறவுகளுடன்
கரும்பு கடித்துக்கொண்டிருந்தாள்...

அவனது
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த
உருக்கமான நேரத்தில்
தொடர்பிலா பிறப்பிற்கு
கேக் ஊட்டினாள்...
பரிசுகளும் பார்ட்டியுமாய்
பரபரப்பில் இருந்தாள்...

செம்புலப்பெயல் நீர்
கொஞ்சம் கலந்ததைப் போல்
நெஞ்சங் கலந்ததாம்
அவர்களின் நேசம்...

அவனது உயிர்மூச்சு
பிரிகின்ற நேரம்
அவளது பெருமூச்சு
காத்திடவில்லை..

No comments:

Post a Comment