Friday, April 22, 2011

























வாழ்த்தும் வசவும்..!

வாழ்த்தே வரமாகும் விந்தையும் கண்டேன்
வாழ்த்தே சாபமாய் மாறவும் கண்டேன்..
வாய்க்குள் சுழல்கின்ற நாவும் தான் அறியுமோ
தூயமனத்தின் வாய்மையும் உணருமோ..?


வாழ்த்திய வாயினை வசப்படுத்தினேன்.
வசவிட்ட வாயினை என்செய்குவன் யான்?
போற்றிய மனமும் புன்னகைத்த முகமும்
தூற்றிய பின்னும் துலங்குதல் விந்தையே ..


புன்னகை அணிந்த நன்முகம் கண்டேன்
வெந்நீர் தெளிக்கும் சாரலும் உணர்ந்தேன்
மென்னகை மட்டுமே முன்னொரு நாளது
முன்நகை மறந்து முள்ளுமாய் ஆனது..!


போற்றினாய் புன்னகை கொண்டனன் நாளும்
தூற்றினாய் துர்முகம் கொண்டிலன் யானும்
சாற்றியே உண்மைகள் சோர்ந்திடேன் இன்முகம்
ஆற்றலும் ஆக்கமும் நீயென நகைத்தேன்.

No comments:

Post a Comment