Sunday, July 24, 2011

மே 18- ஒருகண்ணீர் அஞ்சலி...

மே 18- ஒருகண்ணீர் அஞ்சலி... 




ஆண்டொன்று போனது அழிவுக்கோ குறைவில்லை
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...

எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே 
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...

அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்களால்...

சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்

வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..

இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...

வீழ்வது விளைவதற்கே என்னும் 
விதியினைக் கைகொள்ளுவோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று 
தரணிக்குக் காட்டிநிற்போம்..

இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...

இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...

கண்ணீருடன் 
கலை...

No comments:

Post a Comment