Saturday, September 10, 2011

நன்றியுடன் அல்விதா..!

நன்றியுடன் அல்விதா..!

எங்கிருந்தோ வந்தனன் யான்.
இடச்சாதி என்றனை நீ..
இங்கிவனைப் பெற்றனன் நான்
என்ன தவம் செய்தேனென்றாய்..!

இன்றுனக்குக் கசந்தனன் யான்.
எந்தன் குற்றம் என்ன என்றேன்..
நன்றுனக்கு அறிகுதில்லை
நட்புவைக்க என்றுரைத்தாய்..

அன்றுனக்கு இனித்தது ஏன்
இன்றுனக்குக் கசந்ததுமேன்..?
என்றுனக்குப் பயனில்லையோ
நன்றி நான் பிரிந்து கொள்வேன்..!

என்றுனக்கு என் தேவை 
எதிர்கொள்ள நேரிடுமோ
அன்று என்னை ஸ்மரணிப்பாய்
வந்துனக்கு துணையும் நிற்பேன்...!

இன்று நான் செல்கின்றேன்..
என்றுமுனைப் பிரிந்திடிலேன்..
ஒன்று மட்டும் சொல்லிச் செல்வேன்
நன்றைமட்டும் நம்பிவாழ்வாய்..!


2 comments:

  1. எங்கிருந்தோ வந்தனன் யான்.
    இடச்சாதி என்றனை நீ..
    இங்கிவனைப் பெற்றனன் நான்
    என்ன தவம் செய்தேனென்றாய்..!கலை இதை படீக்கும் போதே தெரியுது இது கிறிஷ்ணன பத்தி பாடுநதுணு புதுசா யோசிங்க ஸார்

    ReplyDelete
  2. இந்த வலைத்தளம் முழுக்க முழுமையாகப் படித்து தான் கருத்து தெரிவித்து இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் நண்பரே..

    அறிவுரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete