Thursday, March 1, 2012

கிள்ளைக்கோர் தாலாடல்..


கிள்ளைக்கோர் தாலாடல்..


மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே..
விழியசைய வந்துநிற்கும் .. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே.
விழியசைய வந்துநிற்கும்.. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
லலலா லலலா லலலலா லலா ஆகா.. ஆகா.. ஆகாகா ம்ஹூஹூம் ம்ஹூஹூ,ம்…

காண் அம்புலியைக் காண் உன்வழி தேடுவான்.. 
தாலாட்டுப் பாடியுறக் கிடுவான்.. 
காண் அம்புலியைக் காண் உன்வழி தேடுவான்.. 
தாலாட்டுப் பாடியுறக் கிடுவான்.... 
பாரா கணங்களோ தாக்கிடும் வெம்மையால்
வாராதெனக்கென வந்திட்ட பதுமையே..
வாராதெனக்கென வந்திட்ட பதுமையே..

மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே.
விழியசைய வந்துநிற்கும்.. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
லலலா லலலா லலலலா லலா ஆகா.. ஆகா.. ஆகாகா ம்ஹூஹூம் ம்ஹூஹூம் ஹூஹூம்.ஹூஹூம்…


உள்ளம் களிகொள்ளும் ,,ஓடிப் போயள்ளும்
தேனாகிச் சேயுந்த னிதழ் நிறையும்..
உள்ளம் களிகொள்ளும் ,, ஓடிப் போயள்ளும்
தேனாகிச் சேயுந்த னிதழ் நிறையும்..
பூவாயுன் பாதமோ வாய்த்ததென் வேதமாய்
மோவாய் மோதிடுமென் எழிலமுதே..
மோவாய் மோதிடுமென் எழிலமுதே..

மொழியிலா…. மோனமே….எல்லையில்லா எந்தன் வானமே.
விழியசைய வந்துநிற்கும்.. கைகள்கட்டி அந்த விண்மீன்களெல்லாம்..
லலலா லலலா லலலலா லலா ஆகா.. ஆகா.. ஆகாகா ம்ஹூஹூம் ம்ஹூஹூம்…ஹூஹூம்.ஹூஹூம்



தயவு செய்து மேற்கண்ட பாடலை கீழ்க்கண்ட எம் பி 3 பாடலை அல்லது யூ ட்யூப் ஒலிக்கவிட்டு அதில் வயலின் இசைக்கேற்ப அந்த மெட்டில் தமிழில் பாடிப்பார்க்கவும். அப்போதுதான் இப்பாடலின் இனிமையையும் அழகையும் உணர இயலும் என்பது என் எண்ணம். 




No comments:

Post a Comment