Tuesday, April 10, 2012

தோற்றுவிட்டேன்..

தோற்றுவிட்டேன்..

படம்


வாழ்க்கைக்கும் வாய்ப்புக்கும் 
இடையில் நடந்த போரில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

வாய்மைக்கும் பொய்மைக்கும் 
நடந்த வழக்கில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்.

புரிதலுக்கும் முரிதலுக்கும் 
இடையிலான இழுவையில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

சமாதானத்துக்கும் சாகசத்துக்கும் 
இடையிலான தீயில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

சாமிக்கும் சாத்தானுக்குமிடையில்
இழுத்த பிரச்சினையில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

வாக்குவன்மைக்கும் வாய்ச்சாடலுக்கும் 
மத்தியிலான விவாதத்தில் 
நான் தோற்றுத்தான்விட்டேன்..

தன்னம்பிக்கைக்கும் தற்கொலைக்குமான 
இழுபறிப் போராட்டத்தில்
நான் தோற்றுத்தான்விட்டேன்..

இனியாவது..

வாய்ப்பில்லா வாழ்க்கையும்
பொய்மையற்ற வாய்மையும்
முரிதலில்லா புரிதலும்
சாகசமில்லா சமாதானமும்
சாத்தானில்லா சாமியும்
வாய்ச்சாடலில்லா வாக்குவன்மையும்
தற்கொலையில்லாத த‌ன்னம்பிக்கையும்

நானின்றி
என் பேரின்றி
என் அடையாளமின்றி
என் இடையூறுகளின்றி

வெற்றிபெறட்டும்..

ஆமென்..

No comments:

Post a Comment