Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 2

பகுதி ‍ 2















அந்த வனமே அதிரடியாகவும்
கற்களால் எறிந்தும் பண்பட்ட
சொற்களால் எறிந்தும்
விற்களைக்கொண்டே வளைத்த நாணிலும்
மிரட்டி அடிபணிய எடுக்கப்பட்ட முயற்சிகள்
ஊழல்கட்சிகளுக்கே
மீண்டும்மீண்டும் வாக்களிக்கும்
கோழைவாக்காளரைப்போல்
சற்றும் மனம் தளரா
தொய்விலாக் குரலில்
தொடர்ந்தது தவளை..

முற்களாய் வதைக்கும் நக்கலும்
கிளைக்குழந்தைக் கொம்புகளைக் கொண்டே
உதைக்கும் முயற்சியும்
வனவரசனுக்கான குமுறலும் கோபமும்
விட்டெறிந்த செங்கற்களும்
விரயமாய்ப்போனதில்
விட்டுத்தொலைத்தன விலங்குகளனைத்தும்..!

எல்லா பொல்லாக்கணங்களுக்கும்
என்றேனும் விடியலுண்டே..
செல்லாக் காசுகளும் சிலநேரம்
சேவைகள் பெறுமே..

நந்தவனமாய அந்த நொந்தவனத்திற்கு
வந்தனள் கோகிலம் வரமாய் அனைவர்க்கும்..
தன் துல்லிய குரலால் பாடிய கோகிலம்
சொல்லி சொல்லி அடித்தது
தவளையின் ஆணவத்தை..
ஆலமரத்தின் பொந்துக்குள் தப்பித்து
ஓலமிட்டே பிழைத்த அத்தவளைக்கு
ஓர் ஆப்பாய் வந்ததாம் கோகிலம்..
ஆம் விடியலுக்காய் வியர்த்த விலங்குகளுக்கு
ஓர் வாய்ப்பாய் வந்ததாம் ஆங்கே..

வறண்ட பாலையில் வடிந்ததொரு வேனல் மேகம்
மருண்ட வனமக்களுக்கு
வரமாய் கோகிலம் தன்
ஸ்வரத்தை கொடுத்தே
ஸ்திரமும் கண்டது..!!

No comments:

Post a Comment