Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 6


பகுதி 6

















குயிலின் குரலால் குரோதம் கொண்ட
கொடூரத் தவளையின் குணம் அறியாமல்
எதார்த்தமாய் மனதில் இருப்பதைச் சொன்னது.
தன் படைப்பின் பெருமையை..அக்குயில்..!

இருதயமின்றி இரண்டகத்தவளையோ
குரூரத்தை அன்பில் தடவி
அக்கறைச் சால்வையை
அழகாய்ப் போர்த்தியது..!

'' பெருமைப்பட இதிலொன்றும்
பெரிதாய் இல்லை...
இன்னும் சாதகம் நீ பெற வேண்டும்..
மின்னும் தாரகை ஆகிடலாம் நீ..
என்னைப்போல ஏற்ற பயிற்சி
யார் தருவாரிவ் வனமதில் உனக்கு..?

என்னுடனிருந்தால் ஏற்றம் பெறுவாய்..
என்னிலும் யாரிடம் காண்பாய் பெருவாய்..?
தற்சமயம் நீ கற்றுக்குட்டியே..
என்வசம் நீவா வெற்றிகிட்டுமே.. ''

தவளையின் குரோதம் உணரா குயிலும்
அவலமாய் நம்பியே சரணடைந்ததுவே..

'' அன்பின் நண்ப..அருமை அருமை..
அறிந்தே மகிழ்ந்தேன் உனது பெருமை..
நீதான் இசையுலகின் மொசார்ட்* உணர்ந்தேன்..
நீதான் கானக்குரவன் அறிந்தேன்..
தான்சேன் உன்னில் அடக்கம் என்பேன்..
தருவாயுன் குருவுபதேசம்..
ஐயா நீவிர் அனைத்தும் கற்றவர்..
ஐயமின்றிப் பகிர்வேன் நாதத்தின் உரு நீ..
எனக்கும் தருவாய் அவ்வருள் முழுதும்..
என்னிசைநிலத்தை முழுதும் உழுதும்
கானப்பயிரை பயிர்த்திடு நீயும்..
நானுன்னடிமை இனி எந்நாளும்..!! ''

அந்தக்குயில் அத்தவளையின்
விரித்தவலையில் மாட்டியது ஐயகோ..!!

No comments:

Post a Comment