Tuesday, April 10, 2012

பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும்போது
ஒருகுழந்தை 
வெட்கப்படுகிறது..

ஒரு காதலி
கால் மண் துழாவுகிறாள்..

ஒரு மாணவன்
உறுதி எடுக்கிறான்
இன்னும் உழைப்பேனென்று..

ஒரு மனைவி
இன்னும் சுவையாக சமைக்கிறாள்.

ஒரு நண்பன் 
வசமிழக்கிறான்..

ஒரு எதிரி
அடிமை ஆகிறான்..

ஒரு ஞானி 
துறவு இழக்கிறான்..

ஒரு கவிஞன் 
கர்வமடைகிறான்
இன்னும் அதிகமாய்
கர்ப்பமடைகிறான்..

பாராட்டப்படும் போது 
பூக்கள் கூட மேலும் 
மணக்கின்றன..

ஒரு பசு இன்னும் 
அதிகமாய்ச் 
சுரந்து பீய்ச்சுகிறது..

ஒரு கைதி 
உணரத் தொடங்குகிறான்..

ஒரு கணவன் 
பாராட்டப்படும்போது 
மேலும் 
காமுறுகிறான்..

பாராட்டப்படுகையில் 
ஒரு தாய் 
புன்னகைக்கிறாள்..

பாராட்டுவதால் 
பலவித பயன்களுண்டு..

பாராட்டுங்கள்..
பாசம் கிடைக்கும்..

பாராட்டுங்கள்..
உலகம் உங்கள் வசம்..!!

No comments:

Post a Comment