Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 8


பகுதி 8




















அவ்வனத்தில் அடுத்தநாள்
தொடர்மழை தொடங்கியது..
வானப்படுகையின் வரப்பு கிழிந்ததோ
கடலில் கொண்ட சூழ் கருவுடைத்ததோ
வருணன் மனைவியுடன் ஊடல் கொண்டானோ
தருணமின்றித் தாக்கியது பேய்மழை..

மழையினால் மட்டற்ற மகிழ்ச்சி
மண்டூகங்களுக்கு மாளாது அல்லவா..?
கொண்டாட்டக்குதியலில்
குயிலை அருகிழுத்து
பயிற்சியெனும் பேரில்
உயிர்ச்சி குலைத்தது..

அக்கடும் மழையில் தன்னால்
இசைக்க வியலா நிலையைக் கூறியும்
இரக்கமே இல்லாத தவளையோ
அரக்கனாய் நின்று ஆட்டிப்படைத்தது..
பாவம் குயிலுக்கோ
குரலும் உடைந்தது..!

குளிரில் நடுங்கிய உடலைப் பொறுப்பதா?
பயிற்சியின் பேரில் நடக்கும்
கொடுமையை சகிப்பதா..?
அப்பாவிக்குயில் பரிதவித்துக் கூவியது..
ஆறுமணி நேர அடைமழையுடன்
ஆறாத ரணத்துடன் இசைமழையும்
இடைவிடாது தொடர்ந்தது அங்கே..!

No comments:

Post a Comment