Friday, April 27, 2012

தவளையும் குயிலும் - 5


பகுதி 5


















குயிலின் குதூகலம் வானைத்தொட்டது.
தன்படைப்பின் பெருமை கேட்பின்
வயமிழக்காதோர் எவருளர்..?
படைப்பின் பெருமை துய்ப்போர் புகழில்
அடையும் சிகரம் உலக இயல்பாம்..

’’என் இசையை விரும்பினாயா..?
என் குரலில் மயங்கினாயா..? ‘’
மீண்டும் மீண்டும் கேள்வியால்
வியந்தது குரலரசி..!

’’ ம்ம்ம்..பரவாயில்லை..
இசைமிக நீளம் என்பது தொல்லை.
குரலினிமை இனிதெனினும்
குரல்வளம் இன்னும் மெருகிடப்படலும்
இசைக்குறிப்பு இன்னும் மேம்படலும்
உன் குரலில் நான் கண்ட குறைகள்..’’

ஒரு சங்கீத வல்லுனரின் சாகசம்போலவும்
கல்விகற்கும் மாணவனுக்கு அறிவுரை போலவும்
காதலனுக்கு காதலியின்
கட்டளைகள் போலவும்..
அத்தவளை அழகாய் விமரிசனம் வைத்தது..

ஆணவம் அறியாக்குயிலும் அதனின்
ஏளனம் புரியாநிலையில் உரைத்தது:
‘’ அப்படியாயின் இன்னும் என்னை
செப்பனிட்டுக் கொள்வேன். நன்றியுனக்கு..
இப்படி புகழ்ந்தது உந்தன் பெருமை.
சுப்புடுகூட தோற்றார் பெருமை..’’
குயிலின் குரலில் உண்மை ஒலித்தது.
தவளையின் இறுமாப்பு ஏனோ ஒளிந்தது.
மேலும் குயிலின் வாசகம் அதனை
தாழா மனிதனின் சீரன்ன மிளிர்த்தது..

’’ எனது குரலொன்றும் தெய்வீகமல்லதான்
காக்கைக்குஞ்சினைப்போல் பொன்குஞ்சு மட்டுமே..
ஆக்கம் நிறைந்த உன் ஆதங்கம்
தாக்கம் கொடுத்தது இன்னும் மிளிரவே..
தாயாய் வந்தாய் தயவும் புரிந்தாய்
சேயாய் உந்தன் அறிவுரை கேட்பேன்..
பண்படுத்து என்னை
பயன்படு எனக்கு.. நீயே என் குரு..! ‘’

குயிலின் இரக்கம் தவளைக்கு ஊட்டம்..
கொண்டது ஆட்டம் கொடுஞ்செயல் எண்ணமுடன்
கொடுமையைத் தொடர்ந்தது..!!

No comments:

Post a Comment