இன்று 23. 12. 2012 ஞாயிறு அன்று சென்னை மேற்குமாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் எனது ‘’ ஒரு கவிஞனின் காகிதம். ‘’ கவிதை நூல் வெளியீட்டு விழா நிழந்தேறியது. கலைமாமணி முனைவர் திரு கரு நாகராஜன் அவர்கள் தலைமையில் குணச்சித்திர நடிகை திருமதி வடிவுக்கரசி அவர்கள் நூலை வெளியிட்டு பொன்னாடை போர்த்தி என்னை வாழ்த்தினார்கள். அவ்விழாவின் புகைப்படங்கள் சில.
Monday, December 24, 2012
Tuesday, December 18, 2012
விழா அழைப்பிதழ் - கலைவேந்தன்
அன்பார்ந்த நண்பர்களே,
உங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதங்கள் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இதோ அழைப்பிதழ் உங்களுக்காக...

புத்தக அமைப்பின் படம் :

நன்றியுடன் என்றும் உங்கள்
கலைவேந்தன்
உங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதங்கள் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இதோ அழைப்பிதழ் உங்களுக்காக...

புத்தக அமைப்பின் படம் :

நன்றியுடன் என்றும் உங்கள்
கலைவேந்தன்
Saturday, December 1, 2012
என்ன வாழ்க்கை இது..?
என்ன வாழ்க்கை இது...?
வாழ்நாள் முழுதும் நான்
வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்..
எண்ணற்ற எதிரிகள்
என்னெதிரில் காத்திருக்க
புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்...
விண்ணில் மிதப்பதாய்
வீண்கனவு பலகண்டேன்...
புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்..
கண்விழித்தேன் காரிருளில்
கசக்கியபின் காண்கின்றேன்..
முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...
’’ ஊதித் தள்ளியபின்
அணைந்துவிடும் தீவர்த்தி
உலகை எரித்திடுமோ
உன்னுறுதி அழித்திடுமோ..?
இன்றுந்தன் கண்ணெதிரில்
நன்று நடம் ஆடிநிற்கும்
நச்சுக் கொடிகளையும்
நன்றாய் அறுத்தெறிவாய்..’’
நன்றாய் முன்வந்து
நான் வணங்கும் தெய்வங்கள்
நன்றே சொன்னதம்மா..
நம்பிக்கை பிறந்ததம்மா..
வாழ்நாள் முழுதும் நான்
வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..
அழுக்குஎன் முகத்திருக்க
ஆடியைத் துடைத்திருந்தேன்..
எண்ணற்ற எதிரிகள்
என்னெதிரில் காத்திருக்க
புண்ணாக்கும் நட்புகளைப்
புறத்தினில் வளர்த்திருந்தேன்...
விண்ணில் மிதப்பதாய்
வீண்கனவு பலகண்டேன்...
புண்ணில் வளர்ந்திருந்த
புழுக்களைப் புறக்கணித்தேன்..
கண்விழித்தேன் காரிருளில்
கசக்கியபின் காண்கின்றேன்..
முன்னைவிட முதிர்வுடன்
முண்டிநிற்கும் முதுமைதனை...
’’ ஊதித் தள்ளியபின்
அணைந்துவிடும் தீவர்த்தி
உலகை எரித்திடுமோ
உன்னுறுதி அழித்திடுமோ..?
இன்றுந்தன் கண்ணெதிரில்
நன்று நடம் ஆடிநிற்கும்
நச்சுக் கொடிகளையும்
நன்றாய் அறுத்தெறிவாய்..’’
நன்றாய் முன்வந்து
நான் வணங்கும் தெய்வங்கள்
நன்றே சொன்னதம்மா..
நம்பிக்கை பிறந்ததம்மா..
Subscribe to:
Posts (Atom)