Wednesday, December 1, 2010

நினைவிருக்கிறதா...?

நினைவிருக்கிறதா...?

அன்று நாம் பேசி பேச்சுக்களை
இன்று மீண்டும் அசை போடுகிறேன்...
புதிதாய்ப் பிறந்தது போல் 
புத்துணர்வு பாய்கிறதே...

தொலை பேசி சூடாகிக் கொதிக்கும் வரை
தொடர்ந்து பேசினோம்...
இணைப்பைத் துண்டிக்க இயலாமல் 
இதயம் துண்டித்தோம்...

உணர்வு கொதித்து உருகிய என்னை
உடனே தடுத்த உன் முதிர்ச்சி
நினைவில் உருகி நிஜத்தில் கருகி
நிழலாய்மாறும் நிலையைக் கண்டோம்...

கவிஞர் இதயம் கலைஞர் உணர்வு
குவியும் ஒரே புள்ளியில் என்றே
ஆதியில் கூறி ஆறுதல் தந்தாய்
மீதிக்கதைகள் மிகுந்திடும் என்றோம்...

நட்பின் முனையில் தொடங்கிய உரைகள்
நடந்தன தொடர்ந்து கைகோர்த்து அனுதினம்
நட்பின் மொட்டு முகிழ்த்தது காதலாய்
ஆயினும் உதிர்ந்தது அதிரடிப் புயலால்..

- இனம் புரியா வேதனையில் எழுந்த உணர்வுகள்...!

No comments:

Post a Comment