Friday, March 4, 2011

எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!

எட்டு எட்டு
எட்டும் வரை எட்டு..உன் இலக்கு
எட்டும் வரை எட்டு..!

எட்டும் வரை உன் லட்சியம்
எட்டும் வரை
முட்டும் வரை உன் சிரம்
வானில் முட்டும் வரை எட்டு..!

உன்வெற்றி எட்டுத்திக்கிலும்
முட்டும்வரை
கைகள் ஓய்ந்து தட்டும் வரை எட்டு..!

உன் வியர்வை கொட்டும் வரை
உழைப்பின் பெருமை தட்டும் வரை
விண்ணேறி வானைக்
கட்டும்வரை எட்டு..!

உலகெலாம் உன்பெருமை எட்டும்வரை
ஊரெங்கும் உன்புகழ் முரசொலித்துத் தட்டும் வரை
எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!

எட்டாத கனவென்று ஏதுமில்லை என்றே
மட்டின்றி மாய்ந்துவிட போதுமில்லை என்றே
எட்டு எட்டு நீ எட்டும் வரை எட்டு..!

வானுனக்கு எல்லை இல்லை மேலும்
மானுனக்கு நிகரில்லை வேகம்
எட்டு எட்டு எட்டாத உயரமெல்லாம் எட்டு..!

தொட்டுவிட்ட பகை முடிக்க நீயுந்தான்
வெட்டுப்பட வெட்டுப்பட முளைத்திடுவாய் என்றே
எட்டு் எட்டு எட்டுத்திக்கும் எட்டும் வரை எட்டு..

1 comment:

  1. தன்னம்பிக்கை தரும் வரிகள்! அருமை ஐயா!

    ReplyDelete