நினைவுகளின் வடுக்கள்
________________________
வருடங்கள் கழிந்தன..
வடுக்கள் மறையவில்லை..
ஒருவருக்கொருவர்
ஊட்டிவிட்ட கைகள்
இன்று தனித்தனி கவளங்களை
உருட்டுகின்றன..
கண்களைத் துடைத்துவிட்ட கைகள்
ஓய்ந்துபோய்விட்டதால்
உப்பளக்குவியலாய் கண்ணீர்..
இருவேளை உணவுக்கிடையில்
ஓராயிரம் சாப்பிட்டாயாக்கள்..
நான்கு நாட்கள் உண்ணவில்லை என்றாலும்
நாதியில்லை இன்று கேட்க..
உன்சக்தி சரிபாதியாய் இருந்தபோது
உலக உருண்டை கால்பந்தானது..
காற்றுப் பிரிந்துபோய் இன்று
உடலே கால் பந்தானது...
இந்நிலை வருமென்றிருந்தால்
முன்னமேயே
மரித்திருப்போம்..
உணர்வற்ற உடலாய் இன்று
காலத்தைச் செரித்திருக்கின்றோம்...
________________________
வருடங்கள் கழிந்தன..
வடுக்கள் மறையவில்லை..
ஒருவருக்கொருவர்
ஊட்டிவிட்ட கைகள்
இன்று தனித்தனி கவளங்களை
உருட்டுகின்றன..
கண்களைத் துடைத்துவிட்ட கைகள்
ஓய்ந்துபோய்விட்டதால்
உப்பளக்குவியலாய் கண்ணீர்..
இருவேளை உணவுக்கிடையில்
ஓராயிரம் சாப்பிட்டாயாக்கள்..
நான்கு நாட்கள் உண்ணவில்லை என்றாலும்
நாதியில்லை இன்று கேட்க..
உன்சக்தி சரிபாதியாய் இருந்தபோது
உலக உருண்டை கால்பந்தானது..
காற்றுப் பிரிந்துபோய் இன்று
உடலே கால் பந்தானது...
இந்நிலை வருமென்றிருந்தால்
முன்னமேயே
மரித்திருப்போம்..
உணர்வற்ற உடலாய் இன்று
காலத்தைச் செரித்திருக்கின்றோம்...




















