Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 11 - 20

11.

பேச்சினில் பண்பதுவும் பண்பது செய்கையிலும்
மூச்சாய் இருப்பின் சிறப்பு.


12.

அவனுள்ளே நானென் றுளத்திலெண்ணி - நித்தம்
சிவனுள்ளே ஆழ்ந்திடுவாய் நீ.


13.

தேனதுவும் பாலும் திகட்டாத முக்கனியும்
மூனதுவும் ஒத்தவள் நீ.


14.

சக்தியும் மாறி சகதியாய் ஏகிடும் 
புத்தியோ மாறிடின் தான்.


15.

புரிதலில்லா கேண்மையும் புன்னகை மாய்த்திட்ட 
பெண்மையும் மேதினியில் பாழ்.


16.

தாம்தம தென்றே நிதமெத்தி வாழ்ந்தவர்
போமென்ப காரிருள் பால்..


17.

தவிர்க்குஞ் செயல்களை நீக்காது ஆற்றின்
தவிக்கும் நிலைவரும் காண்.


18.

பணியெனக் கூறின் வணங்கா தலையும்
பணியும் முடிதிருத்துங் கால்.


19.

வைத்ததோர் பாசமும் சேர்த்திட்ட நேசமும் 
கைத்தலாமோ காலத்தால் தான்.


20.

காணுகிற காட்சியும் ஈர்வரை வாராதே
மாணும் மதியதுவே சீர்.

No comments:

Post a Comment