Monday, August 6, 2012

பாழும் உடல் படுத்தும் பாடு..!


பஞ்சத்திலும் கொஞ்சமாய் கிள்ளியெடுத்து 
மிஞ்சியதிலும் கெஞ்சிக் கெஞ்சி 
ஊட்டிவளர்த்த என் அன்புமகன்
கொஞ்சிப்பேச வந்தமனைவிக்கு முன் என்னை 
வஞ்சனை கொண்டு விரட்டியதேன்?


புரியலையே!

பத்துவிரலும் தேயத்தேய
பத்துப்பத்துப் பாத்திரங்களை
ஒத்தையாய் கழுவி இவன் 
மொத்த வயிற்றையும் கழுவினேனே?
சித்திரம்போல் ஒருமனைவி கண்டு
கொத்திவிட்டானே பாம்பாய் ஏன்?



புரியலையே!


ரெண்டுபிள்ளை நான்பெத்தா 
விண்டுபோகும் பாசமுன்னு
கொண்டாட ஒருமகனை
செண்டுபோல பெத்தேனே
ஒண்டியாப்பொறந்ததால
வண்டிவண்டியா பாசம்கொட்டி
சண்டியனாய் அவன் மாற
கண்டுகொள்ள ஆளில்லாம
பரிதவிச்சு கிடக்கேனே அது ஏன்?


தலைவிதியா?

No comments:

Post a Comment