Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 81 -90

81.

வியப்பினைத் தந்து விவேகமும் மாய்த்துப்
பயனறச் செய்யுமாம் சூது.


82.

பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பாழ்.


83.

பணமென்றால் பத்தும் மறந்திடு வோரில்
குணமொன் றமைவது ஏது.


84.

தவிர்க்குஞ் செயல்களை நீக்காது ஆற்றின்
தவிக்கும் நிலைவரும் காண்.


85.

சாவும் பிணியுடன் சார்ந்துவரும் மூதுமையும்
மேவிய மானிடரில் இல்.


86.

சொற்சுவை யாங்கே சுயமாய் நிறைந்ததாய்
பொற்குவையாய் சொக்கும் கவி.


87.

இயக்குவா னிச்சையில் இச்சகம் என்றும்
இயக்குனன் ஈசன் அறி.


88.

ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின் 
வருமந்தக் காதல் அறி.


89.

நாளொன்றில் எண்ணிடா நாழிகை யேதுமில்லை
வாளாய்ப் பிளக்கும்முன் சொல்.


90.

கண்ணிரண்டு பெற்றும் பயனென்கொல் மாலவன்
கண்ணன்தாள் காணா தவன்.

No comments:

Post a Comment