Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 61 - 70

61.

கடன்பெற்றோ ருள்ளம் கலங்கியே நிற்றல்
விடமுண்ட ஓர்பசு அற்று.


62.

துணையாகும் நட்பது ஈர்பக்கத் தீயின்
அணைத்தெறும்பைக் காத்திட லற்று.


63.

வரையின்றி ஈயுமவ் வள்ளலையு மோர்நாள்
வரையின்றித் தூற்று முலகு..


64.

நூறுபெற்றும் நூலோர் அவைதனில் சீர்பெறா
பேறுபெற் றென்ன பயன்.


65. 

தோதுடன் தீயதுவும் நன்றாய்ந்து இன்னலதை
ஏதுவாய் தீர்த்தல் அறிவு.


66.

அரிது செயல்வல்லான் உண்டெனில் ஆங்கே
பெரிதாகப் போற்றப் படும்.


67.

பரிசினை வேண்டா பதவியும் வேண்டா
கரிசனம் கொண்டவர் நட்பு.


68

பயக்குஞ்சொல் பாங்காய் பயற்க பயனில்
மயக்குஞ்சொல் வீணே அறி.


69.

கூற்றுவன் வந்தக்கால் கூவிப் பயனேது
போற்றுதற் கேற்றபடி வாழ்.


70.

வீண்பழியும் பொல்லாங்கும் நேர்பகையும் இம்மூன்றும்
நாணெனக் கொல்லும் எமன்.

No comments:

Post a Comment