Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 71 - 80

71.

நானென்னும் மாயையினை நீங்கியே தாழ்ந்திடில்
மானுடன் காண்ப துயர்வு.


72.

விரைந்துதவா நட்பு வினயமிலாக் காதல்
உரைத்திடின் பூஉலகில் பாழ்.


73.

அன்பெனும் ஆயுதம் ஆற்றாத தொன்றுண்டோ
மன்னும் புகழீட் டுமது.


74.

சேருவோர் தன்குணம் சேறுடன் சேர்ந்திட்ட
நீரன்ன என்றே உணர்.


75.

செப்புமொழி ஆயிரம் செவ்வியன ஆயினும்
ஒப்பில் தமிழதுவே காண்.


76.

கூறிய கூரிய சொற்கள் இருபுறம்
கூரிய வாளுக்கு நேர்.


77.

செப்பிடு வித்தையினில் செல்லுமோர் மாந்தனுக்கு
செப்பிடு நல்லுரை நீ.


78.

பாருட னொத்து பாவனை காவாக்கால்
யாருமே மதியார் போ.


79.

பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்
மூச்சினைக் கொல்பவள் பெண்.


80.

இங்குளன் இல்லையில்லை அங்குளன் என்றின்றி
நெஞ்சுளனை நாளும் நினை.

No comments:

Post a Comment