Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 51 - 60

51.

சேர்ந்திழுக் குங்கால் செழுமை பெறுந்தேர்போல்
ஊர்கூடி வாழ்தல் நலம்.


52.

குடித்துக் குடலில் புழுசேர்த் தவனை
அடித்தே விரட்டி விடு.


53.

நலமின்றி நூறாண்டு வாழ்தலினும் சீராய்
சிலவாண்டு நோயின்றி வாழ்.


54.

துயர்துடைக் குங்கரங்கள் தூயன கொண்டே
அயர்தனைப் போக்கிடும் நட்பு.


55.

யாரெதைச் சொல்லினும் ஏற்றிடும் சிற்றறிவு
பேரதைப் பாழ்த்திடும் பார்.


56.

செயல்வல்லன் சொல்வல்லன் ஆயோ ரிவரினும்
சொல்லிய செய்வன் சிறப்பு.


57.

ஒழிக புறங்கூறல் மற்றோரை அன்றேல்
பழிபெற்றுப் பாழா குவர்.


58.

சற்றேனும் யோசி சடுதியில் செய்யுமுன்
கற்றோர்க் கழகே யது.


59.

பண்பெனும் தெய்வகுணம் கற்றதனால் வாராது
முன்செய் தவத்தால் வரும்.


60.

பொடிதெனினும் சீர்மிகு காரம் குறையா
கடுகில் குறையுண்டோ சொல்.


No comments:

Post a Comment