Saturday, August 18, 2012

எனது குறட்பாக்கள்..! 91 - 100

91.

யாரென்று கூறினால் காதலுக்கு ஆட்டனத்தி 
யாருமாதி மந்தியும் காண்.


92.

நயந்து தெளிதலே நட்புக் கணியாம் 
பயனில் பதருடன் நட்பு.


93.

தாழ்ந்துசெல் எந்நாளும் தீதொன்றும் வாராது
வாழ்ந்திடும் ஆறென் றறி.


94.

கூறுஞ்சொல் குற்றமின்றி நேர்வழியில் சேர்ந்திடில்
வேறெதுவும் தீங்கில்லை காண்.


95.

வீழ்ந்துப்பின் ஏற்றம் விடிவுபெற்றோன் வாழ்வதனில்
ஊழ்வதுவும் தோற்கும் சமர்.


96.

காதலே மேலென்று காய்ந்தே கிடந்திடுவோர்
மாய்தலே காண்பர் அறி.


97.

ஓதுகின்ற நான்மறை ஓர்நாளும் காவாதே
தீதுடன் நின்ற மனம்.


98.

உள்ளத்துப் போர்மூளும் ஊனுருகும் ஆங்கொரு
கள்ளமனம் கொண்டோர் நிலை.


99.

ஒருமொழிச் சொல்லில் உளறிக் குளறின் 
வருமந்தக் காதல் அறி.



100.

கண்டுயிர்த்தேன் காரிகையின் கண்ணிரண்டை அல்லாது
பண்டே மடிந்தேன் அறி.
 

No comments:

Post a Comment