Sunday, May 25, 2008

அடிமைப்பெண்

அடிமைப்பெண்


அடங்கிபோவது வாழ்க்கை என்று
எவர் சொன்னார் பெண்ணே?

அனுசரிப்பதாய் எண்ணி
அடகுவைத்தாய் உன்னை
இதன் பெயர் வாழ்க்கையா?

நீ அடங்கியதால் ஒரு
அடிமைத்தலைமுறை உருவாகும்
அறிவாயா நீ?

தன் ஆசாபாசங்களைக்
குழி தோண்டிப் புதைத்துவிட்டு
தன்னவனுக்காய்
தன் நிறம்மாற்றும் வித்தையை
எங்கிருந்து கற்கிறாய் நீ?

பச்சோந்திகூட பகற்பொழுதில் மட்டுமே
தன் நிறம் மாற்றும்....
இச்சைகளை மூட்டை கட்டி
எத்தனை நாள் உனமனதைக்கொல்வாய்?

உன் கூட்டுப்புழு வாழ்க்கையை
உன்னதம் என்று சொல்லாதே
உன்மத்தம் என்று சொல்!

ஒரு வம்சத்தையே
அடிமை வம்சமாக்கி
துவம்சமாக்கி விடாதே!!!

No comments:

Post a Comment