Sunday, May 25, 2008

புத்தாண்டு இரண்டாயிரத்தெட்டு!

புத்தாண்டு இரண்டாயிரத்தெட்டு!


அன்பைக்கு ழைத்துநல் லில்லறம் தான்வளர்த்து
என்பை உருக்கிடும் நோய்போக்கி - தன்மையாய்
மாண்புடைய தாக்கியே இவ்வுலகை மாற்றிடும்
ஆண்டி ரண்டாயிரத் தெட்டு.


வன்முறைகள் ஓய்ந்திட தீவிர வாதங்கள்
நன்முறையாய் மாறியே நாடெங்கும் - அன்புடன்
பாங்குடன் கல்வியும் பல்கலைகள் யாவுமே
ஓங்கிடுமி ரண்டாயிரத் தெட்டு.

வரலாறு போற்றிட வேண்டும் நம்மை
சிரமீது தாங்கிட வேண்டும் - கரங்கோர்த்து
முன்னேறு வோமிங்கு நாளும் வரவேற்போம்
பொன்போலி ரண்டாயிரத் தெட்டு.

தீஞ்சுவைப் பாக்கள் புனைந்து திறம்பட
தேன்சுவைப் பாமாலைச் சூட்டி - வான்புகழ்
கொண்டதாய் மாற்றியே தீந்தமிழை விண்ணுக்கு
விண்டிடுமி ரண்டாயிரத் தெட்டு.

No comments:

Post a Comment