Sunday, May 25, 2008

எனக்குப் புரிகிறது......!

எனக்குப் புரிகிறது......!

எச்சிலை நீ விழுங்கும் போதெல்லாம்
என் மேல் கொண்ட காதலையும் விழுங்குவாய்
எத்தனை நாள் திரைபோட்டுக்கொள்வாய் நீயும்?
தன்னை மறந்த உன் வார்த்தைகளில்
உன்னை மறந்து உன் காதலும் வழிகிறது
இனிப்பைக்கண்ட குழந்தையின் எச்சிலாய்...!
எத்தனை விரட்டினாலும் விலகாத
புண்மேல் ஈக்களாய் எண்ணங்கள்
சுற்றி வரும் உன்னை....!
மருந்திட்டால் போய்விடும்
பருக்கள் அல்ல ...
இது காதல்........!

No comments:

Post a Comment