Sunday, May 25, 2008

மனிதன்.......வாழ்ந்தானாவீழ்ந்தானா?

மனிதன்.......வாழ்ந்தானாவீழ்ந்தானா?


எதிர்முகன் கூறுகிறான்:

நால்வகை வருணமாய் மனிதனைக் கூறிட்டு

தோல்வகையைக் கண்டு சாதியும் கற்பித்து

சால்வையைப்போர்த்தி அரசியல் நடத்தி

தோல்விதான் கண்டான் மனிதன் இவ்வுலகில்


நேர்முகன் பதில்:

நீர்வகை கண்டு நிலம் புதுப்பித்தான்

ஏர்முனை கொண்டு எழில்வளம் செய்தான்.

தேர்முதல் கார்வரைப் புதினங்கள செய்தான்

ஓர் இனம் ஒருகுணம் என்றனன் மனிதன்!


எதிர்முகன் கூறுகிறான்:

புரட்டுகள் திருட்டுகள் எங்குமே பரவின

வரட்டு வாதங்கள் வலம் பலவந்தன

திரட்டலும் சுரண்டலும் விதிகளாய் மாறின

மிரட்டுதல மனிதனின் வேதமாய் ஆனதே!


நேர்முகன் பதில்:

இலக்கியம் பலகண்டு இசைபட வாழ்ந்தான்

கலைபல கவின்மிக கற்றறிந்தனன் அவன்

உலகியல் பலவறிந் தொழுகினன் வாழ்வினில்

நிலையிலா நிலைகளம் உணர்ந்தனன் மனிதன்!


எதிர்முகன் கூறுகிறான்:

போர்பல செய்து பூமியைப் புரட்டினான்

கூர்வாள் கொண்டு கொடுமைகள் புரிந்தான்

வேர்பல கொன்று விருட்சத்தை எரித்தான்

சேர்முகம் கண்டு செய்வினை செய்தான்!


நேர்முகன் பதில:

வனமதை அழித்து வனப்புகள் செய்தான்

சினமதைக் குறைத்து சீர்பல பெற்றான்

குணமதைக் கொண்டுநல் காவியம் படைத்தான்

உணவினுக்கென ஓர் உன்னதம் அறிந்தான்!

No comments:

Post a Comment