Sunday, May 25, 2008

அன்பெனப்படுவதியாதெனின்.......!

அன்பெனப்படுவதியாதெனின்.......!


தன்னலமே இல்லையென்று
பறையடித்துச் சொல்லும்...!
என்னவன் தான் என்னவள் தான்
என்றுரக்கச் சொல்லும்...!

பொன்புகழ் தான் கோடி கோடி
நாடி வந்தபோதும்
உண்மை அன்பு என்றும் வெல்லும்
உண்மை என்று சொல்லும்..!

கோடி நன்மை ஓடிவந்து
வாசல் தட்டும் போதும்
நட்பும் அன்பும் போதுமென்று
நல்ல மனம் சொல்லும்..!

நானும் நீயும் என்று சொல்லும்
வார்த்தை மாறிப்போகும்
நாமும் நாமும் என்றுசொல்லி
நாளும் ஏங்கச் சொல்லும்!

அடியும் வலியும் பெற்ற போது
அணைத்து சேர்த்துக் கொஞ்சும்
அன்பு காட்டி தலைகலைத்து
ஆறுதலைக் கூறும் !

No comments:

Post a Comment