Monday, January 18, 2010

ஓர் அபலையின் அவலக்கதை...





















‘’ என் மார்புச்சேலை விலகிக்கிடக்கிறது....’’

அந்தப் பெண்ணின்
முனகல் குரலை முடிக்க விடவில்லை...

‘’ ஆகா.. அற்புதம்’’ என்றது ஓர் ஆண்குரல்...

‘’ எங்கே எங்கே ‘’ எட்டிப்பார்க்கும்
இன்னொரு ஆண்முகம்...

‘’ என்ன அழகு ‘’ ரசித்து வியந்தது
மற்றொரு சாண்பிள்ளை...

‘’ சரியாகத் தெரியவில்லை ‘’
கவலையுடன் ஒரு வீர மகன்...

இப்படிப் பல அறிமுகம்
எல்லாமே வெறிமுகம்....

‘’ என் மார்புச்சேலை விலகிக்கிடக்கிறது...
யாராவது சரி செய்யுங்களேன்...’’

சோகத்துடன் புலம்பியது
இருகைகளையும் இழந்த
அந்த அபலையின் அழுகுரல்....!

No comments:

Post a Comment