Monday, January 18, 2010

உன் வேய்ந்தோள்களுக்கு நான் அடிமை...!

உறவுகள் என்னை அலைக்கழிக்கும்போது
அயர்ந்து ஓடிவரும் என்னை அன்போடு
ஒருகணம் தாழ்த்தாது அணைத்திருப்பாய்...!

வெற்றிப்பட்டங்களை நான் வானில் பறக்கவிட்டு
சற்றுத்தளர்ந்து சரிந்து விழும் எனனை
ஓடிவந்து உன்னில் புதைத்துக் கொள்வேன்..!

உன் மெல்லிய தோள்களில் புவிதாங்கும் வலிமை
கடலளவு சோகத்தைக் கரைத்துவிடும் திறமை
என்னுள் புத்துணர்வைப் புதைத்துவைக்கும் திண்மை..!

ஆம் கண்ணே....
உன் வேய்ந்தோள்களுக்கு நான் அடிமை...!

No comments:

Post a Comment