Monday, January 18, 2010

ஈழம் - சில வேதனை வரிகள்...!

தமிழரின் வேதனை தீருமோ?


ஊர்க்கூடித் தேரிழுக்க நாளும்
ஒப்பாரி வைத்தழுதுக் கூவி
சேர்ந்தோரை கொண்டிழுக்க வைத்து
செம்மையாய் முயற்சித்தும் அந்தோ
தேர்க்காலில் பலமாகப் பட்டு
தள்ளாடி விழுந்திடுமோ தமிழ்த்தேர்?

கருணையிலா நிதியே!


கூட்டணியாம் பேய்பிடித்து உச்சியிலே ஆடும்
வாட்டமுறும் நம்மினத்தை மறக்கவைத்து நாளும்
ஏட்டளவில் பேச்சுப்பேசி முதுகில் குத்தும் வர்க்கம்
ஓட்டுக்காக வீடெரிக்கும் கழகம்ஒரு துக்கம்!

தமிழர் துயர் தீருமோ?


நெஞ்சைக் கையிலேந்தி நேசத்தை நிறைத்துவைத்து
வஞ்சகர் செயுங்கொடுமை வலியுடன் நிதம்பார்த்து
பிஞ்சுக் குழந்தைகளின் பிணித்திடும் ஓலம்கண்டு
தஞ்சமின்றி பரிதவிக்கும் தமிழனுக்கு விடிவிலையோ?

No comments:

Post a Comment