Monday, January 18, 2010

தேன் துளிகள் பகுதி - 9

ஈழம்...

ஈழம் என்னும் வேழம்
ஈன்றெடுத்த வலிகள் ஆழம்...

வாழவழிகேட்டு வாடிய மனிதம்
வாழ்விழந்து சாய்ந்த கோலம்

பாழும் உயிரென பாவிகளின்
ப‌லியிடலால் வீழ்ந்துப‌ட்ட‌ ஓல‌ம்...

நாளும் உண்வுக்காய்
ந‌ல‌ம்கெட்டுப் புழுதியில் வீழும்...

க‌ண்ணீர் வ‌ற்றிப்போய்க் க‌ண்க‌ளில்
உப்ப‌ள‌ங்க‌ள் வதைப‌ட‌ங்க‌ளாய் வ‌ரைப‌ட‌ங்க‌ள்..

இல‌ங்கையின் வ‌ரைப‌ட‌ம் க‌ண்ணீர்த்துளிபோல்
இய்ல்பாய் அமைந்த‌து விதியா...?

இனிய‌ க‌ண‌ங்க‌ளுக்காய் இன்னும் கூட‌
காத்திருப்புக‌ளின் மிச்ச‌ங்க‌ள்...

என்றுதான் விடியும் இந்த‌ விதியின்
ஈழ‌ விளையாட்டுப்ப‌ட‌ல‌ம்.....?


சென்றானே...

சென்றானே என்னவன் என்காதல் மன்னவன
நின்றானே நிலைபெற்று நெஞ்சினில் தென்னவன்
முன்றானை தனில்முடிந்து வைத்தாலும் முன்னவன்
ஒன்றான எம்நெஞ்சம் தனைமுழுதும் தின்னவன்
கன்றாக தாயிழந்து கதறுகிறேன் அன்னவன்
என்றாலும் வருவானோ என்மனதில் நின்னவன்
நன்றாக நான்தொழுது வேண்டிடினும் பின்னவன்
குன்றாக எனைக்காகக வருவானோ பொன்னவன்..!

வருவாயோ....

வருவாயோ வந்தேன்மேல் பொழிவாயோ அருள்மழை
தருவாயோ முந்திவ்ரம் அழியாமல் தருநிழலாய்
அருமருந்தாய் சிந்திக்கும் வழிசொல்லி அருள்வாயோ
தருவாயில் வந்துநிதம் கழிவிரக்கம் ஒருவிதமாய்
குருவேபோல் வெந்தழியச் செழிக்கவைத்து அருகிருந்து
கருநிறந்தான் சிந்தனையில் வழிபெறவா திருக்கவைத்து
திருவாயால் செந்தமிழால் சுழிபிறழா கருத்தமைத்து
உருவான‌ ச‌ந்த‌முட‌ன் க‌ழிய‌ழகா த‌ருவேனே...

No comments:

Post a Comment