Monday, January 18, 2010

தேன் துளிகள் பகுதி - 10

1. மலர்வாய் கொண்டு நீ மணிமுத் துதிர்த்தாலே
பலர்வாய் பொத்தியே உன்குரல் செவிமடுப்பார்
அலர்மேல் வந்துதித்த அரங்கனும் காப்பானுனை
கலங்காமல் கண்வளர்வாய் கண்மணியே என்னுயிரே!

2.என்றுமே உன்னுள்ளம் ஏழையின்பால் இரங்கனும்
ஒன்றே தானேனினும் பகுதியாய் பகிர்ந்து உண்
நன்றே நினைத்து நீ நலங்களை செய்துவந்தால்
குன்றேறி நின்றானுனை காத்திடுவான் என்றென்றும்!

3.கொண்டு நற்குணங் களை நீங்காமல் நீயும்
தொண்டுபல செய்துநல் மனங்களைப் போற்றியே
வண்டுபோல் அலைந்துநல் செல்வங்கள் சேர்த்துநீ
தண்டுடை கமலம் போல் ஒட்டாமல் வாழ்கவே!

4.உன்னாலே நான்உயிர்த்தேன் உன்னாலே தான்ஜனனம்
உன்னால் தான் மரணமெனில் அதுவும் என் வரமே
கண்ணாலே பார்த்தாலே கன்றுபோல் துள்ளிடுவேன்
உன்கண்மையின் ஓரணுவாய் காலமெலாம் வாழ்ந்திடுவேன்!

1 comment: